என் மலர்
செய்திகள்

மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயிலில் இலவச வைபை வசதி
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளை கவருவதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு பொழுதுபோக்கு வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓடும் மெட்ரோ ரெயிலில் இலவச வை-பை நெட்வொர்க் வசதியை வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது.
இதற்கான மெட்ரோ ‘ஆப்’ பதிவை ‘ஸ்மார்ட்’ போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மெட்ரோ ரெயிலில் பயணிகள் ஏறியதும் ‘வை-பை’ வசதியை ஆன் செய்து நெட்வொர்க் வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
‘வை-பை’ வசதி மூலம் பிடித்த சினிமா, பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழியில் சினிமா படங்கள், பாடல்கள், டி.வி. நிகழ்ச்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இதன் மூலம் பயணிகள் தங்களது ஸ்மார்ட் போன்களில் எளிதில் சினிமா, பாடல், நாடகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை எளிதில் கண்டு களிக்கலாம்.
நாட்டிலேயே முதல் முறையாக சென்னை மெட்ரோ ரெயிலில் தான் வை-பை நெட்வொர்க் வசதி தொடங்கப்படுகிறது.
3 மெட்ரோ ரெயில்களில் சோதனை ஓட்டமாக வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஓடும் ரெயில்களில் ‘வை-பை’ வசதி வெற்றிகரமாக செயல்பட்டது.
வருகிற மார்ச் மாதம் மெட்ரோ ரெயில்களில் இலவச வை-பை வசதி மூலம் பயணிகள் எச்.டி. தரத்தில் சினிமா பாடல்கள், சீரியல்களை கண்டு மகிழலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #WiFi