search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடவாசல் அருகே 13 வயது சிறுமியை கடத்திய தச்சு தொழிலாளி
    X

    குடவாசல் அருகே 13 வயது சிறுமியை கடத்திய தச்சு தொழிலாளி

    குடவாசல் அருகே 13 வயது சிறுமியை தச்சு தொழிலாளி கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த செல்லூரை சேர்ந்தவர் முரளிதரன். 13 வயது சிறுமியான இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வேடம் பூரை சேர்ந்த யோகேஸ்வரன் (30) என்பவர் முரளிதரன் வீட்டில் தங்கி தச்சு வேலை செய்தார். அவர் நேற்று சிறுமியை அழைத்து கொண்டு மாயமாகி விட்டார். அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி சிறுமியின் தாய் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சந்தான மேரி வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியையும் அவரை கடத்தி சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    சிறுமியின் தந்தை முரளிதரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதுபற்றி அறிந்ததால் தான் சிறுமியை யோகேஸ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    முன்பின் தெரியாத நபர்களை வீட்டில் தங்க வைத்தால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கூறினர். இந்த சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×