என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை - கூலி தொழிலாளி கைது
Byமாலை மலர்16 Feb 2019 10:49 AM GMT (Updated: 16 Feb 2019 10:49 AM GMT)
கருங்கல் அருகே முதியவர் கல்லார் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கருங்கல்:
கருங்கல் அருகே பூடேற்றி கொசவன்விளையை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 65). கூலி தொழிலாளி.
பூடேற்றி காஞ்சிறாங்கோட்டு விளையை சேர்ந்தவர் தொபியாஸ் (47). கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு சபரிமுத்து பக்கத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சபரிமுத்துவை வழிமறித்து தொபியாஸ் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த தொபியாஸ் அந்த பகுதியில் இருந்த கல்லால் சபரிமுத்துவை முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் முகம் சிதைந்து பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்த சபரி முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொபியாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொபியாஸ் கொலை நடந்த போது குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான சபரிமுத்துவின் உடல் பிரேதபரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
கருங்கல் அருகே பூடேற்றி கொசவன்விளையை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 65). கூலி தொழிலாளி.
பூடேற்றி காஞ்சிறாங்கோட்டு விளையை சேர்ந்தவர் தொபியாஸ் (47). கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு சபரிமுத்து பக்கத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சபரிமுத்துவை வழிமறித்து தொபியாஸ் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த தொபியாஸ் அந்த பகுதியில் இருந்த கல்லால் சபரிமுத்துவை முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் முகம் சிதைந்து பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்த சபரி முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொபியாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொபியாஸ் கொலை நடந்த போது குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான சபரிமுத்துவின் உடல் பிரேதபரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X