என் மலர்
செய்திகள்

கவர்னர் திரும்பி வரும் வரை போராட்டம் தொடரும்- நாராயணசாமி பேட்டி
கவர்னர் கிரண்பேடி திரும்பி வரும் வரை போராட்டம் தொடரும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #narayanasamy #congress #governorkiranbedi
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
துணை ராணுவ படையினர் தங்களது வேலையை செய்வார்கள். நாங்கள் எங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர்வோம். கவர்னர் எங்கள் போராட்டத்தை கண்டு பயந்துதான் வெளியேறி உள்ளார்.

கவர்னர் சென்றாலும் எங்கள் போராட்டம் தொடரும். எங்களை கைது செய்தாலும் கவலை இல்லை. கவர்னர் திரும்ப வரும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார். #narayanasamy #congress #governorkiranbedi
Next Story






