என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே லாரி தலைக்குப்புற கவிழ்ந்ததில் டிரைவர் உடல் நசுங்கி பலி
    X

    ஈரோடு அருகே லாரி தலைக்குப்புற கவிழ்ந்ததில் டிரைவர் உடல் நசுங்கி பலி

    ஈரோடு சோலாரில் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் இருந்து கரூருக்கு மக்காச்சோளம் ஏற்றி கொண்டு நேற்று இரவு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த லாரி நேற்று இரவு 10.30 மணி அளவில் ஈரோடு சோலாரில் சென்ற போது திடீரென தடுப்பு சுவரில் மோதியது.

    மோதிய வேகத்தில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாட்டுக்குள் சிக்கி பழனிசாமி உடல் நசுங்கினார். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    இடிபாட்டுக்குள் சிக்கி பலியான பழனிசாமி உடல் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் சோலார் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. #tamilnews
    Next Story
    ×