search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    விபத்துக்குள்ளான பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

    பண்ருட்டி அருகே பஸ், லாரி மோதல் - 10 பேர் படுகாயம்

    பண்ரூட்டி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்துள்ள சேலையூர், சேப்ளாநத்தம், விணங்கேணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து தங்களது ஊருக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அந்த பஸ்சை புவனகிரியை சேர்ந்த அசோகன் (வயது 54) என்பவர் ஓட்டினார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கொஞ்சிக்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி அந்த வழியாக நெல் அறுவடை எந்திரத்தை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் அசோகன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பக்தர்கள் சேலையூரை சேர்ந்த அகிலன் (39), சேப்ளாநத்தத்தை சேர்ந்த மங்களலட்சுமி (47), விணங்கேணியை சேர்ந்த கஸ்தூரி (37), லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் தொட்டியூரை சேர்ந்த ராஜு (56), லாரி கிளீனர் செஞ்சியை சேர்ந்த திருஞானம் (32) ஆகியோர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். #tamilnews
    Next Story
    ×