என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கம் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி
    X

    கிருமாம்பாக்கம் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

    கிருமாம்பாக்கம் அருகே சேலையில் தீப்பிடித்ததில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது71). சம்பவத்தன்று இவர் குளிப்பதற்காக வீட்டில் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்தார். அப்போது மின்கசிவு காரணமாக தீப்பொறி பறந்து ஆண்டாளின் சேலையில் பற்றியது.

    சிறிது நேரத்தில் தீமளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலியால் அலறி துடித்த ஆண்டாளை உடல் கருகிய நிலையில் அவரது மகன் இசை மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆண்டாள் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×