search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயம்
    X

    கோட்டக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோட்டக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இவரது மகள் மகேஸ்வரி (வயது 25). இவர் புதுவை மூலகுளத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மகேஸ்வரி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மகேஸ்வரி இல்லை. இதையடுத்து கோவிந்தசாமி தனது மகள் மாயமானது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அருட்செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மகேஸ்வரிக்கும், பூத்துறையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த வாலிபருடன் மகேஸ்வரி மாயமாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    Next Story
    ×