search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைப்பு

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    18-ந்தேதி 134 கன அடியாக இருந்த நீர்வரத்து 19-ந்தேதி 72 கன அடியாக குறைந்தது. நேற்று 81 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 121 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 72.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 72.04 அடியாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.  #MetturDam
    Next Story
    ×