என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே வாலிபர்களுக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்14 Jan 2019 10:28 AM GMT (Updated: 14 Jan 2019 10:28 AM GMT)
திருமங்கலம் அருகே 2 வாலிபர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
திருமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் வீரமணி (வயது 34). இவரது பக்கத்து வீட்டுக்காரர் விருமாண்டி (35). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் வீரமணி போதையில் வந்து விருமாண்டியிடம் சண்டை போட்டார். தகராறு முற்றவே வீரமணி ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விருமாண்டியின் வயிற்றில் குத்தினார். இதைத் தடுக்க வந்த முத்தையா (32) என்பவரது கையிலும் கத்திக்குத்து விழுந்தது.
கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கத்திக்குத்து குறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X