என் மலர்
செய்திகள்

சோளிங்கர் அருகே காட்டன் சூதாடிய 2 பேர் கைது
சோளிங்கர் அருகே காட்டன் சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கர், பாத்திகுளம், மேற்கு பாஜார், திருகுளமேடு ஆகிய பகுதிகளில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக அரக்கோணம் டி.எஸ்.பி. துரைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மார்க்கெட் பகுதியில் ராஜா (வயது 45). ரங்கன் (50). ஆகியோர் காட்டன் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






