search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிப்ரவரி 1-ந்தேதி குமரிக்கு வைகோ வருகை
    X

    பிப்ரவரி 1-ந்தேதி குமரிக்கு வைகோ வருகை

    பிப்ரவரி 1-ந்தேதி குமரிக்கு வருகை தரும் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #vaiko
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட அலுவலகத்தில் அவைத் தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மகராஜ பிள்ளை வரவேற்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பிச்சைமணி, துணைச் செயலாளர் ஆனந்த் ராஜ், மாநில நிர்வாகிகள் மோசஸ் மனோகர், சந்திரன், ராபின்சன் ஜேக்கப், சுமேஷ், ராணி செல்வின், ராஜ்குமார், அரிராம ஜெயம் மற்றும் ராபர்ட் கிங்ஸிலி, ஜெரோம் ஜெயகுமார், ஷாஜி, பீர்முகம்மது, நெல்சன், பால்ராஜ், மணிகண்டன், வைகோ.குமார், சிவகுமார், சந்திரசேகர், கைலாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 1-ந்தேதி வருகை தரும் தலைவர் வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதுடன் தேர்தல் நிதியாக ரூ.51 லட்சம் வழங்குவது, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பணிக்குழுவை உடனடியாக நியமனம் செய்து தலைமை கழகத்திற்கு அனுப்புவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கூட்ட முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆனந்த ராஜன் நன்றி கூறினார்.  #vaiko
    Next Story
    ×