என் மலர்
செய்திகள்

டி.கல்லுப்பட்டி அருகே கடத்தப்பட்ட மாணவி மீட்பு- காதலன் கைது
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்த கொல்லவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 17), பிளஸ்-2 மாணவி.
அதே ஊரைச் சேர்ந்த விஜயபாண்டியன் மகன் கோடீஸ்வரன் (26) பி.காம். பட்டதாரி. இவரும் மகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் மகேஸ்வரி திடீரென மாயமானார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசில், முத்துக்கிருஷ்ணன் புகார் செய்தார்.
அதில், மகேஸ்வரி கடத்தப்பட்டுள்ளதாகவும், கோடீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் இதனை செய்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காதலனுடன் மகேஸ்வரி ஊருக்கு வந்த போது போலீசார் அவரை மீட்டனர். கோடீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர் விஜயபாண்டியன்-வசந்தி, தம்பி கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.