search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு
    X

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என்று கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார். #makkalneethimaiyam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாய நிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின் கோபுரங்களுக்காக, உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

    தமிழக விவசாயிகளின் நலன் பல்வேறு வகைகளில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பொன் கொடுக்கும் விவசாய பூமியின் மீது போர் தொடுக்கப்படுகிறது. கெயில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் என்று அனைத்து திட்டங்களிலும் விவசாயி நலன் மற்றும் விவசாய வளம் பாதிப்பிற்குள்ளாகியே வருகிறது.

    தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, அவர்களின் விளை நிலங்களும் அபகரிக்கப்பட்டு உயிர்விடும் சூழலில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் உயர்மின் கோபுரங்களுக்காகவும், விவசாயிகள் இன்னும் ஒரு இன்னலை, இந்த இக்கட்டான சூழலில் சந்திப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

    எப்பொழுதும் காட்டும் அலட்சியப்போக்கினை இம்முறையாவது அரசு தவிர்த்திட வேண்டும்.

    உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, அரசு பேச்சுவார்த்தைக்கு நேரில் அழைத்திட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து அவற்றை நிறைவேற்றிட வழி செய்திட வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழக விவசாயிகளுடன் என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #makkalneethimaiyam

    Next Story
    ×