search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் வருகிற 31-ந்தேதி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    வேலூரில் வருகிற 31-ந்தேதி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    வேலூரில் வருகிற 31-ந்தேதி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    வேலூர்:

    அரக்கோணம் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்களை சரியான அளவில் எடைபோடாமல் அனுப்பப்படுகிறது.

    இந்த செயலை கண்டித்து ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் லாரியில் வரும் எடைதராசில் சரியான அளவில் எடையிட்டு அந்தந்த மாதத்திற்கான கலர்நூல் தையலிட்டு விற்பனையாளர் முன்பாக கடையிலேயே வழங்க கோரியும் தொடர்ந்து இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவின்படியும் மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வருகிற 31-ந்தேதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசுகிறார். மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×