search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு
    X

    திருவள்ளூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    திருவள்ளூர் அருகே வாலிபரை அரிவாள் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (31). விவசாயி. இன்று காலை அவர் புன்னப்பாக்கம் அடுத்த ஈக்காடு கண்டிகை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டு வந்தனர். உடனே மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் இருந்த சுரேசை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×