search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு
    X

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே முன் விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (40), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    நேற்று இரவு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ராஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ராஜாவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த ராஜா சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×