search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாபர்கான்பேட்டையில் போலி நம்பர் பிளேட் பொருத்தி கார் விற்பனை - 2 பேர் கைது
    X

    ஜாபர்கான்பேட்டையில் போலி நம்பர் பிளேட் பொருத்தி கார் விற்பனை - 2 பேர் கைது

    ஜாபர்கான்பேட்டையில் போலி நம்பர் பிளேட் பொருத்தி கார் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர், டிச. 15-

    எம்.ஜி.ஆர்.நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர் அருகே நேற்று அதிகாலை சப்-இன்ஸ் பெக்டர் வீரமணி, ஏட்டு ஜான் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த 2 கார்களை நிறுத்தினார்கள். அதில் இருந்த தி.நகர் தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், மீனம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சார்லஸ் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் வந்த காருக்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. போலியான நம்பர் பிளேட் பொருத்தி காரை ஓட்டி வந்தது தெரிந்தது.

    உடனடியாக 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்துஇரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் விசாரணை யில் இருவரும் கார்களை திருடி என்ஜின் நம்பர், சேஸ் நபர்களை அழித்து விட்டு போலியாக நம்பர் பிளேட் பொருத்தி கார்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×