என் மலர்
செய்திகள்

மக்களின் மனநிலை எடப்பாடிக்கு புரியவில்லை- நல்லகண்ணு பேட்டி
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து பொதுமக்களின் மனநிலை அவருக்கு புரிய வில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது என நல்லகண்ணு தெரிவித்தார். #nallakannu #edappadipalanisamy #election2018
மதுரை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
5 மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். மக்கள் விரோத செயல்பாடுகளே பாரதீய ஜனதா தோல்விக்கு காரணம்.
5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பாதிக்காது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். பொதுமக்களின் மனநிலை அவருக்கு புரிய வில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து அங்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டினால் தமிழகம் பாலைவன மாகிவிடும். டெல்டா பகுதிகள் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #nallakannu #edappadipalanisamy #election2018
Next Story






