search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை அருகே பஸ் கவிழ்ந்து அய்யப்ப பக்தர்கள் 16 பேர் காயம்
    X

    விராலிமலை அருகே பஸ் கவிழ்ந்து அய்யப்ப பக்தர்கள் 16 பேர் காயம்

    விராலிமலை அருகே இன்று காலை பஸ் கவிழ்ந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விராலிமலை:

    ஆந்திர மாநிலம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் ஊர் திரும்பினர். 

    இன்று காலை திருச்சி அருகே உள்ள விராலிமலை  பூதக்குடி நான்கு வழிச் சாலையில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. 

    இதில் பஸ்சில் இருந்த பக்தர்கள் கங்காதரன், நெறியன், சூரியகாந்தம்,  சுபத்ரா, யோக ரத்தினம் உள்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களை விராலிமலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×