search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    ஜோலார்பேட்டை அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

    ஜோலார்பேட்டை அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போனை திருடிச் சென்று விட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் விஜயகுமார் (31). இவர் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்றிரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை செல்போன் கடை அருகில் சலூன் கடைக்காரர் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயகுமாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

    விரைந்து வந்த விஜயகுமார் கடையை திறந்து பார்த்தபோது விலை உயர்ந்த 7 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×