என் மலர்
செய்திகள்

X
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
By
மாலை மலர்4 Dec 2018 11:28 PM IST (Updated: 4 Dec 2018 11:28 PM IST)

புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி:
தர்மபுரி டவுன் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடைகளில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த குமார், மணிகண்டன் ஆகிய 2 பேர் சிக்கினார்கள்.
இதேபோல் மதிகோன்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சரவணன் என்பவர் சிக்கினார். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி டவுன் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடைகளில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த குமார், மணிகண்டன் ஆகிய 2 பேர் சிக்கினார்கள்.
இதேபோல் மதிகோன்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சரவணன் என்பவர் சிக்கினார். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X