என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எந்த கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல - துரைமுருகன் விளக்கம்
சென்னை:
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் தோழமை கட்சிகளே” என்று கருத்து தெரிவித்தார்.
துரைமுருகனின் இந்த கருத்து தி.மு.க. கூட்டணி விவகாரத்தில் கடும் சலசலப்பையும், சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது. ம.தி.மு.க.வையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க. சற்று தொலைவில் வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
துரைமுருகனின் கருத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினோ மற்ற மூத்த தலைவர்களோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் மன வேதனையை உண்டாக்கி இருக்கிறது.
நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில், “தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தொடர்ந்து மவுனமாக உள்ளார்.
என்றாலும் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி வருகிற 3-ந்தேதி கவர்னர் மளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ள ம.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பது ம.தி.மு.க.வினரிடம் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து தான் தெரிவித்த கருத்து சரியானது தான் என்பதை வலியுறுத்தி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பொதுநல நோக்கத்துடன் பல்வேறு கட்சிகள் எங்களுடன் வந்து ஒன்று சேர்ந்துள்ளன. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மணமகளாகவும் மணமகனாகவும் இருக்கிறோம்.
ஆனால் நாங்கள் இன்னமும் கணவன்- மனைவி ஆகவில்லை. இன்னமும் திருமணம் நடக்காததால் திரு மணபந்தம் ஏற்படவில்லை.
தி.மு.க.வுடன் பல கட்சிகள் நல்ல நட்புடன் உள்ளன. அந்தத் தோழமைக் கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல.
ஆனால் எனது அரசியல் அனுபவத்தில் கூட்டணி என்பது, ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து அதற்கான உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று சொல்லிக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்