search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே லாரி உரிமையாளர் மர்ம மரணம்
    X

    ஒட்டன்சத்திரம் அருகே லாரி உரிமையாளர் மர்ம மரணம்

    ஒட்டன்சத்திரம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த லாரி உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    நெல்லை மாவட்டம் நீடாங்குளம் அருகே உள்ள சிவாயர்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(50). லாரி உரிமையாளர். ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் இருந்து தென்காசிக்கு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி வந்துள்ளார்.

    ஒட்டன்சத்திரம்-மூலனூர் சாலையில் உள்ள கரியாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே லாரியிலேயே மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் கள்ளிமந்தையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பழனிச்சாமி மர்மமான முறையில் இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×