என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே பள்ளி-கல்லூரி மாணவிகள் மாயம்
Byமாலை மலர்19 Nov 2018 4:58 PM GMT (Updated: 19 Nov 2018 4:58 PM GMT)
அரியலூர் அருகே பள்ளி-கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் .இவரது மகள் வசந்ததேவி (வயது 17). இவர் அணைக்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்ததேவி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
அரியலூர் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் பிரியங்கா( வயது 14), 9ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் பிரியங்காவை அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் கடத்தி சென்றதாக , ரமேஷ் மீன்சுருட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X