search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே பள்ளி-கல்லூரி மாணவிகள் மாயம்
    X

    அரியலூர் அருகே பள்ளி-கல்லூரி மாணவிகள் மாயம்

    அரியலூர் அருகே பள்ளி-கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் .இவரது மகள் வசந்ததேவி (வயது 17). இவர் அணைக்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இதையடுத்து அவரது பெற்றோர் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்ததேவி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

     அரியலூர் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் பிரியங்கா( வயது 14), 9ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் பிரியங்காவை அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் கடத்தி சென்றதாக , ரமேஷ் மீன்சுருட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×