என் மலர்
செய்திகள்

எண்ணூர் துறைமுகம் - கப்பலில் உடைப்பு ஏற்பட்டதால் கடலில் எண்ணெய் கசிவு
சென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், அதிலிருந்து கடலில் எண்ணெய் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #EnnorePort #CoralStars #OilSpill
சென்னை:
சென்னையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் இருந்து பைப் மூலமாக் கச்சா எண்ணெய் இறக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அந்த பைப்பில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதிலிருந்த எண்ணெய் கடலில் கலந்தது. இதுகுறித்து தகவல் பரவியதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து கடலோர காவல் படை கப்பல்கள் விரைந்து சென்று கடலில் படிந்த எண்ணெயை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதுதொடர்பாக துறைமுக அதிகாரிகள் கூறுகையில், கடலில் படிந்த எண்ணெயை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர். #EnnorePort #CoralStars #OilSpill
Next Story






