search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டறம்பள்ளியில் லாரி மோதி வாலிபர் பலி
    X

    நாட்டறம்பள்ளியில் லாரி மோதி வாலிபர் பலி

    நாட்டறம்பள்ளியில் லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாதவல்லியை சேர்ந்த ராமதாஸ் மகன் பிரதீப் (24). இவரது நண்பர் விஜய் (21). இருவரும் இன்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பிரதீப் பின்னால் அமர்ந்திருந்தார். நாட்டறம் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்தில் இறந்தார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×