search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொப்பூர் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் தாயார் பலி
    X

    தொப்பூர் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் தாயார் பலி

    தொப்பூர் அருகே லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் தாயார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கெங்கலாபுரம் பகுதியை சேர்ந்த சித்தன் மனைவி காளியம்மாள் (வயது60). இவர் இன்று காலை 8 மணிக்கு தொப்பூர் - ஓசூர் பைபாஸ் சாலை அருகே சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது சர்வீஸ் ரோட்டில் நிறுத்தி இருந்த லாரி டிரைவர் திடீரென்று லாரியை பின்னால் எடுத்தார். இதில்அந்த லாரி மோதியதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த காளியம்மாளின் மகன் சுவாமிநாதன் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
    Next Story
    ×