என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை
By
மாலை மலர்3 Nov 2018 6:06 AM GMT (Updated: 3 Nov 2018 6:06 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
அறந்தாங்கி:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங் களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்பட்டது. இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் வெயில் அடித்து வருகிறது. இதேபோல் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ங்களிலும் இன்று காலை முதல் வெயில் அடித்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பகல் வரை பெய்தது. அதன்பிறகு மழை பெய்ய வில்லை. இந்தநிலையில் இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். மழை அதிகம் பெய்யும் நேரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் இன்று மழை பெய்த போதிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங் களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்பட்டது. இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் வெயில் அடித்து வருகிறது. இதேபோல் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ங்களிலும் இன்று காலை முதல் வெயில் அடித்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பகல் வரை பெய்தது. அதன்பிறகு மழை பெய்ய வில்லை. இந்தநிலையில் இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். மழை அதிகம் பெய்யும் நேரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் இன்று மழை பெய்த போதிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
