என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம்
Byமாலை மலர்30 Oct 2018 5:21 AM GMT (Updated: 30 Oct 2018 5:21 AM GMT)
வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதால் வரும் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் பருவமழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains
சென்னை:
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு வங்க கடலில் லுபான், டிட்லி என இரு புயல்கள் உருவானதால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக 1-ந்தேதி முதல் தமிழகத்தில் பருவமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை இந்த மாதம் 21-ந் தேதி வரை நீடித்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலும் மழை பெய்தது. அக்டோபர் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் 24 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 12 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. இது 50 சதவீதம் குறைவு.
புதுச்சேரியில் 17 செ.மீ.க்கு பதில் 16 செ.மீ. பெய்துள்ளது. இது 9 சதவீதம் குறைவு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு வங்க கடலில் லுபான், டிட்லி என இரு புயல்கள் உருவானதால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்தம் வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நவம்பர் 1-ந்தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை இந்த மாதம் 21-ந் தேதி வரை நீடித்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலும் மழை பெய்தது. அக்டோபர் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் 24 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 12 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. இது 50 சதவீதம் குறைவு.
புதுச்சேரியில் 17 செ.மீ.க்கு பதில் 16 செ.மீ. பெய்துள்ளது. இது 9 சதவீதம் குறைவு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X