search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தருமபுரி:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.சி.பி.எஸ். திட்ட ஊதிய விகிதத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நடைமுறை படுத்த வேண்டும், பயணப்படியை (எப்.டி.ஏ) அடிப்படை ஊதியத்தை 5 சதவீகிதம் வழங்கப்பட வேண்டும், மடிக்கணினி வழங்கப்படாத அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உடனடி மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, முன்னாள், இன்னால், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தீர்த்தகிரி நன்றி கூறினார்.
    Next Story
    ×