search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணகி நகரில் பெண்ணை வெட்டிய 4 பேர் கைது
    X

    கண்ணகி நகரில் பெண்ணை வெட்டிய 4 பேர் கைது

    கண்ணகி நகரில் பெண்ணை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு வழக்கில் 3 மாதங்களா புழல் சிறையில் இருந்தார். தன் மனைவி ஜெயிலில் வந்து பார்க்காததால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டார்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் தனது நண்பர்களுடன் தனது மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்றார். திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து சரண்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இது தொடர்பாக திரு வான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திசென்னை கண்ணகி நகரை சேர்ந்த பிரபு, விக்கி, ஆட்டோ டிரைவர் விமல், சென்னை பெரியார் நகரை சேர்ந்த பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். ராஜேஸ் உல்பட 2 பேரை தேடி வருகின்றனர்.


    Next Story
    ×