search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி சீட்டு நடத்தி பட்டாசு கொடுத்தால் நடவடிக்கை - காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை
    X

    தீபாவளி சீட்டு நடத்தி பட்டாசு கொடுத்தால் நடவடிக்கை - காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை

    தீபாவளி சீட்டு நடத்தி அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பொதுமக்கள் பட்டாசு வாங்க வேண்டாம் என்று காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Diwali
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தாலோ, பட்டாசு தயாரித்தாலோ, வீட்டிலேயே வைத்து விற்பனை செய்தாலோ, நிதி சீட்டு நடத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு பட்டாசு விநியோகம் செய்தாலோ சட்டப்படி குற்றமாகும்.

    இவ்வாறு ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் வெடி பொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருட்கள் விதிகள் 2008-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் கடையில் உரிமத்தின் நகலை பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிபடுத்திட வேண்டும். விதிகளுக்குட்பட்டு தீ தடுப்பு சாதனங்களுடன் கடை அமைக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள், அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பட்டாசு வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Diwali

    Next Story
    ×