search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனுரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலி
    X

    வில்லியனுரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலி

    வில்லியனூரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலியானார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது80). நேற்று மதியம் இவர் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமிதரிசனம் செய்வதற்கு முன்பு கோவில் குளத்தில் படிக்கட்டில் இறங்கி கால் கழுவ சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கோவிந்தம்மாள் குளத்தில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய கோவிந்தம்மாள் சிறிது நேரத்தில் குளத்தில் பிணமாக மிதந்தார். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் குளத்தில் கோவிந்தம்மாள் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலயய்ன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செலவராஜ், ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×