என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீடி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை- நண்பர் கைது
Byமாலை மலர்20 Oct 2018 10:25 AM GMT (Updated: 20 Oct 2018 10:25 AM GMT)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பீடி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தாலுகா ராமியாம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன் (36). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கேபிள் பதிக்க குழிதோண்டும் பணியில் இரவு ஈடுபட்டனர்.
அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனை கீழே தள்ளி, அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் லட்சுமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் லட்சுமணனை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் அவினாசி அருகே வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அருகே லட்சுமணன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று லட்சுமணனை கைது செய்து விசாரித்தனர்.
சம்பவத்தன்று முருகன், லட்சுமணனும் மது அருந்தி விட்டு வேலை செய்துள்ளனர். அப்போது முருகன், லட்சுமணனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் பீடி இல்லை என்று கூறியதாகவும், இதனால் முருகன், லட்சுமணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கைதான லட்சுமணனை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். பீடி கேட்ட தகராறில் தொழிலாளியை, உடன் வேலை செய்த நண்பரே கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தாலுகா ராமியாம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன் (36). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கேபிள் பதிக்க குழிதோண்டும் பணியில் இரவு ஈடுபட்டனர்.
அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனை கீழே தள்ளி, அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் லட்சுமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் லட்சுமணனை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் அவினாசி அருகே வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அருகே லட்சுமணன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று லட்சுமணனை கைது செய்து விசாரித்தனர்.
சம்பவத்தன்று முருகன், லட்சுமணனும் மது அருந்தி விட்டு வேலை செய்துள்ளனர். அப்போது முருகன், லட்சுமணனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் பீடி இல்லை என்று கூறியதாகவும், இதனால் முருகன், லட்சுமணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், முருகனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கைதான லட்சுமணனை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். பீடி கேட்ட தகராறில் தொழிலாளியை, உடன் வேலை செய்த நண்பரே கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X