search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் வழிப்பறி- வாலிபர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
    X

    போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் வழிப்பறி- வாலிபர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்

    சேலத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓமலூர் பகுதியில் கடந்த 6-ந்தேதி இரவு சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லக்கண்ணு உள்பட 6 பேரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தது.

    மேலும் சிலரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம், மோட்டார் சைக்கிள், செல்போன் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றது. இந்த கும்பலை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் சங்கர் 2 தனிப்படைகள் அமைத்தார்.

    இந்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது சந்தேகத்தின் பேரில் ஓமலூர் பகுதியை சேர்ந்த 4 பேரும், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரும் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கும், சம்பவத்தன்று கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?, இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சிக்கிய 5 பேரில் சிலர் வாலிபர்கள் ஆவார்கள். ரகசிய இடத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் மர்ம கும்பலை பற்றிய பல்வேறு விபரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. #tamilnews
    Next Story
    ×