search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை
    X

    வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை

    வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெல்லக்குட்டை பூவாங்கா மரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (60), விவசாயி. இவர், 80 வயதை கடந்த தாய் காத்தாயி அம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.

    பிரகாசத்திற்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் பிரகாசத்தின் வீட்டிற்குள் இருந்து இன்று காலை திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

    அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து, வீட்டருகே சென்று பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுப்பற்றி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பாயில் காத்தாயி அம்மாள் பிணமாக கிடந்தார்.

    பிரகாசத்தின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தது. உடல்களும் அழுகி துர்நாற்றம் வீசியது. இதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் தாயை கொன்று விட்டு பிரகாசம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×