search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு மணல் ஏற்றி வந்த  2 லாரிகள் பறிமுதல்- 2 பேர் கைது
    X

    திருட்டு மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்- 2 பேர் கைது

    செந்துறை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி வெள்ளாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்து ரகசிய இடத்தில் சேமிக்கின்றனர். பின்னர் அதனை லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்தி செல்கின்றனர். அதே போன்று முள்ளுக்குறிச்சியில் இருந்து 2 டாரஸ் லாரிகளில் மணல் ஏற்றி ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை வாயில் அருகே வந்துகொண்டு இருந்தது. 

    அப்போது தளவாய் போலீசார் அந்த இரண்டு லாரிகளையும்  மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தளவாய் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகளையும் கைப்பற்றியதோடு லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன்,  முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×