search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே மளிகை கடையில் இருந்த 40 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே மளிகை கடையில் இருந்த 40 பவுன் நகை-பணம் கொள்ளை

    திருவள்ளூர் அருகே மளிகை கடையில் இருந்த 40 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூைரை அடுத்த காக்களூர் தேவா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். அதே பகுதி டீச்சர்ஸ் காலனியில் மளிகை கடை வைத்து உள்ளார்.

    கிருஷ்ணகுமாரின் வீடு ஒதுக்குப்புறமாக உள்ளது. இதனால் வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மளிகை கடையில் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கடையை பூட்டி விட்டு கிருஷ்ணகுமார் வீட்டுக்கு வந்தார். இன்று அதிகாலை கடையை திறக்க சென்ற போது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தது.

    மேலும் 25 கிலோ எடையுள்ள 10 அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களும் கொள்ளை போய் இருந்தன.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கடையில் இருந்த நகை-பணம் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது.

    மளிகை கடையில் நகை- பணம் வைத்திருப்பதை அறிந்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது கிருஷ்ணகுமாருக்கு அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×