என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் அருகே மளிகை கடையில் இருந்த 40 பவுன் நகை-பணம் கொள்ளை
திருவள்ளூர்:
திருவள்ளூைரை அடுத்த காக்களூர் தேவா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். அதே பகுதி டீச்சர்ஸ் காலனியில் மளிகை கடை வைத்து உள்ளார்.
கிருஷ்ணகுமாரின் வீடு ஒதுக்குப்புறமாக உள்ளது. இதனால் வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மளிகை கடையில் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கடையை பூட்டி விட்டு கிருஷ்ணகுமார் வீட்டுக்கு வந்தார். இன்று அதிகாலை கடையை திறக்க சென்ற போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தது.
மேலும் 25 கிலோ எடையுள்ள 10 அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களும் கொள்ளை போய் இருந்தன.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கடையில் இருந்த நகை-பணம் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது.
மளிகை கடையில் நகை- பணம் வைத்திருப்பதை அறிந்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது கிருஷ்ணகுமாருக்கு அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்