search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே கொள்ளையர்கள் 3 பேர் கைது
    X

    செங்கல்பட்டு அருகே கொள்ளையர்கள் 3 பேர் கைது

    செங்கல்பட்டு அருகே கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள படாளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மாலை படாளம் கூட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்பு, கஜேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிற்குமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். உஷாரான அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மதுராந்தகத்தை அடுத்த ஜமீன்என்றத்தூரைச் சேர்ந்த தனுஷ், செய்யூரை அடுத்த தேவராஜபுரம் காமேஷ், மதுராந்தகம் கவாங்கரையைச் சேர்ந்த புனிதன் என்பது தெரிந்தது.

    பிடிப்பட்ட 3 பேரும் சித்தமூர் அண்ணாநகர் பகுதியில் 2 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இதே போல் அணைக்கட்டு, படாளம் பகுதிகளிலும் கை வரிசை காட்டி இருக்கிறார்கள்.

    செங்கல்பட்டு டவுனில் மோட்டார் சைக்கிளை திருடி தப்பி வந்தபோது 3 பேரும் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது

    Next Story
    ×