என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுல்தான்பேட்டையில் ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்- போலீசார் விசாரணை
புதுச்சேரி:
சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமதுஉசேன் (வயது46). இவர் தனது சகோதரர்களான இதயதுல்லா, பரகதுல்லா ஆகியோருடன் சேர்ந்து வில்லியனூர்- சுல்தான் பேட்டை மெயின்ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர்களது ஓட்டலுக்கு கணுவாபேட்டை வினாயகர் கோவில் தெருவை சேர்ந்த வேலு (வயது30) என்பவர் சாப்பிட வந்தார்.
ஆனால் உணவு பண்டங்கள் தீர்ந்து விட்டதாக முகமது உசேன் அவரது சகோதரர்கள் தெரிவித்தனர். ஆனால் ஓட்டலில் பலர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது தனக்கு மட்டும் உணவு இல்லையா என்று வேலு கேட்டு தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முகமது உசேன், இதயதுல்லா, பரகதுல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து வேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து சென்ற வேலு தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு மீண்டும் ஓட்டலுக்கு வந்தார். அப்போது பழிக்கு பழியாக ஓட்டலில் இருந்த இதுயதுல்லாவை தாக்கிய வேலு மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.
இது குறித்து முகமதுஉசேன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைய்யன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்