என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவளக்குப்பத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
Byமாலை மலர்29 Sep 2018 12:29 PM GMT (Updated: 29 Sep 2018 12:29 PM GMT)
தவளக்குப்பத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
பாகூர்:
புதுவை தவளக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் புதுவை கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுகன்யா (வயது21). இவர் பாக்குமுடையான்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் சுகன்யா கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் சுகன்யா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சுகன்யாவை உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கும் சுகன்யா இல்லை.
இதையடுத்து குணசேகரன் தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சுகன்யாவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X