search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தன்னையே சோதனைக்கு உட்படுத்திய ஐஜி பொன்.மாணிக்கவேல்
    X

    தன்னையே சோதனைக்கு உட்படுத்திய ஐஜி பொன்.மாணிக்கவேல்

    சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சென்னையில் நேற்று தொழிலதிபர் வீட்டில் தனது குழுவினருடன் சோதனை செய்வதற்கு முன்பாக தன்னையே சோதனைக்கு உட்படுத்தியது வியப்பை ஏற்படுத்தியது. #IdolSmuggling #PonManickavel #StatueSmuggling
    சென்னை:

    ஒரு இடத்தில் போலீசார் சோதனையிட செல்லும் போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.

    குறிப்பாக சோதனையிடச் செல்லும் போலீசாரை, வீட்டில் இருப்பவர்கள் சோதனை செய்துதான் உள்ளே அனுப்ப வேண்டும். இது பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதே இல்லை.

    நேற்று ரன்வீர்ஷாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இதனை முழுமையாக கடை பிடித்தார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் படையுடன் ரன்வீர் ஷாவின் வீட்டுக்கு பொன்.மாணிக்கவேல் சென்றபோது, அங்கு வக்கீல்கள் இருந்தனர். ரன்வீர்ஷாவின் செயலாளராக பணியாற்றும் பெண் ஒருவரும், பணியாட்கள் சிலரும் வீட்டில் இருந்தனர்.


    அவர்களிடம் பொன்.மாணிக்கவேல், என்னையும், என்னோடு வந்துள்ள சக போலீசாரையும் நீங்கள் முதலில் சோதனை நடத்த வேண்டும். அதன் பின்னரே நாங்கள் உள்ளே செல்வோம் என்று கூறினார்.

    இதனை ஏற்று, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் முதலில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவருடன் சென்ற போலீசாரும் சோதனை செய்யப்பட்டனர். இதன் பிறகு ரன்வீர்ஷாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எப்போதுமே வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளும் அதிகாரி ஆவார். நேற்று அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. #IodlSmuggling #PonManickavel #StatueSmuggling
    Next Story
    ×