என் மலர்
செய்திகள்

திருப்பூர் அருகே வாலிபர் வெட்டிக் கொலை - பிணம் காட்டுக்குள் வீச்சு
திருப்பூர் அருகே வெட்டு காயங்களுடன் காட்டுக்குள் பிணமாக கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் கள்ளப்பாளையத்தில் உள்ள காட்டு பகுதியில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் கள்ளப்பாளையத்தில் உள்ள காட்டு பகுதியில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. அவரை வேறு எங்காவது கொலை செய்துவிட்டு பிணத்தை இங்குள்ள காட்டு பகுதியில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






