search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு அருகே வடமாநில வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
    X

    திருச்செங்கோடு அருகே வடமாநில வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

    திருச்செங்கோடு அருகே வடமாநில வாலிபரிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு உள்ள தனியார் போல்வெல் லாரி நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஏம்ஸ்சந்த் வேலைபார்த்து வருகிறார். இவர் ஊருக்கு செல்வதற்காக தனது சம்பள பணத்தை ரூ. 40 ஆயிரத்தை வாங்கி கொண்டு அங்குள்ள தினசரி மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு ஓடினர். அவர் சத்தம் போடவே பொதுமக்கள் அவரை விரட்டினர். அதில் ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 2 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்செங்கோடு மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. மற்ற 2 வாலிபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×