என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை சிப்காட்டில் லோடு ஆட்டோ-லாரி மோதல்: டிரைவர் பலி
    X

    ராணிப்பேட்டை சிப்காட்டில் லோடு ஆட்டோ-லாரி மோதல்: டிரைவர் பலி

    ராணிப்பேட்டை சிப்காட்டில் லோடு ஆட்டோ லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா வி.சி.மோட்டூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் தணிகாச்சலம் (வயது 32). லோடு ஆட்டோ டிரைவர். இவர், நேற்றிரவு ராணிப்பேட்டையில் இருந்து சிப்காட் நோக்கி லோடு ஆட்டோவை ஓட்டிச்சென்றார். இவருடன், கிளீனர் வேலுவும் (31) சென்றார்.

    பேரி கிரவுண்டு ரெயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி, லோடு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ நொறுங்கி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் ஆட்டோ டிரைவர் தணிகாச்சலம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    கிளீனர் வேலுவுக்கு தலை மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டது. விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி விட்டார். ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தணிகாச்சலத்தின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், படுகாயமடைந்த கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×