என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவல்துறையை கண்டித்து கருணாஸ் பேசியது கோழைத்தனம்- நடிகர் கார்த்திக்
Byமாலை மலர்21 Sep 2018 4:22 AM GMT (Updated: 21 Sep 2018 4:22 AM GMT)
காவல் துறையை கண்டித்து கருணாஸ் பேசியது கோழைத்தனம் என்று மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் கூறினார். #Karunas #Karthik
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
2½ ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அப்படி ஒதுங்கி இருந்திருக்கக்கூடாது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பகுதி நேர அரசியல்வாதிகளாக இல்லாமல் முழுநேர அரசியல் வாதிகளாக செயல்பட வேண்டும். இனி நானும் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவேன்.
எனது கட்சியில் தவறு செய்தவர்கள் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் நான் விலக்க நேரிடும்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். அதே சமயத்தில் திருவாரூர் தொகுதி மிகப்பெரிய தலைவர் போட்டியிட்ட இடம் என்பதால் அதில் போட்டியிடவில்லை. பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம்.
தமிழர்களுக்கு வீரம் அதிகம். போராடலாம். ஆனால் கொலை செய்யக் கூடாது. காவல்துறையை கண்டித்து கொலை செய்வோம் என கருணாஸ் என்ன காரணத்துக்காக கூறினார் என்று தெரியவில்லை. அவர் அவ்வாறு பேசியது கண்டித்தக்கது. இது மிகவும் கோழைத்தனமான செயலாகும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #Karunas #Karthik
மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
2½ ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அப்படி ஒதுங்கி இருந்திருக்கக்கூடாது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பகுதி நேர அரசியல்வாதிகளாக இல்லாமல் முழுநேர அரசியல் வாதிகளாக செயல்பட வேண்டும். இனி நானும் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவேன்.
எனது கட்சியில் தவறு செய்தவர்கள் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் நான் விலக்க நேரிடும்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். அதே சமயத்தில் திருவாரூர் தொகுதி மிகப்பெரிய தலைவர் போட்டியிட்ட இடம் என்பதால் அதில் போட்டியிடவில்லை. பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். ஆளும் கட்சி மக்களுக்கு எதிராக இருந்தால் அதற்கு எனது ஆதரவில்லை.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #Karunas #Karthik
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X