search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மத்திய சிறையில் கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல்
    X

    சேலம் மத்திய சிறையில் கைதியிடம் 2 செல்போன்கள் பறிமுதல்

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 செல்போனை பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம் மத்திய சிறையில் சுமார் 850-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிறை அதிகாரிகள் டவர் பிளாக்கில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஒரு கைதியிடம் 2 செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த செல்போன் அவருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×