என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
Byமாலை மலர்20 Sep 2018 4:42 PM GMT (Updated: 20 Sep 2018 4:42 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் மகாலிங்கம், பட்டு மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டையில் உள்ள தர்கா மற்றும் தனியார் லாட்ஜ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(வயது 29), மஞ்சுநாத்(29), இர்பானுல்லா (27), ராஜா(42), பாலாஜி (34), ஹரீஷ்(30), சரவணன்(34), ராஜவேல்(51), கிருஷ்ணமூர்த்தி(33), கணேஷ்(31) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500-ம், சீட்டுகட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சென்னப்பநாயக்கனூர் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர் களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த போஸ் என்கிற இளந்திரயன்(24), கணேஷ் (29), சேட்டு(41), வெங்கடா சலம்(31), இளங்கோ(26) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் சீட்டுகட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் மகாலிங்கம், பட்டு மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டையில் உள்ள தர்கா மற்றும் தனியார் லாட்ஜ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(வயது 29), மஞ்சுநாத்(29), இர்பானுல்லா (27), ராஜா(42), பாலாஜி (34), ஹரீஷ்(30), சரவணன்(34), ராஜவேல்(51), கிருஷ்ணமூர்த்தி(33), கணேஷ்(31) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500-ம், சீட்டுகட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சென்னப்பநாயக்கனூர் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர் களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த போஸ் என்கிற இளந்திரயன்(24), கணேஷ் (29), சேட்டு(41), வெங்கடா சலம்(31), இளங்கோ(26) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் சீட்டுகட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X