என் மலர்
செய்திகள்

ஊத்தங்கரையில் கல்லூரி மாணவி தற்கொலை
ஊத்தங்கரையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சரண்யா (வயது 18). இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்தார். வயிற்று வலி காரணமாக கடந்த 17-ந் தேதி பூச்சி மருந்தை குடித்துவிட்டார்.
ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இவரை மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். வரும் வழியிலேயே இறந்து போனார்.
இது குறித்து ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






